உலகத் தொழிலாளர்களின் ஆதர்ச நாயகன் லெனின் நினைவு ஜோதியுடன் பாட்டுத்தலைவன் பாரதி, விடுதலைப் போராட்ட வீரர் வஉசி நினைவுச் சுடர்கள் நெல்லையில் உள்ள லெனின் சிலையின் முன்பு சங்கமிக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மூன்று நாள் மாநில மாநாடு ஞாயிறன்று நெல்லையில் எழுச்சியுடன் துவங்கியது.